Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திடீரென கூடிய மக்கள் கூட்டம்.. 4 நாளைக்கும் பிரியாணி சமைக்க போறாங்களா? வெங்கட்பிரபு கிண்டல்!
சென்னை: 4 நாட்கள் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தொடர்ந்து சென்னை மக்கள் கடைகளில் திடீரென கூட்டமாக கூடியதை இயக்குநர் வெங்கட் பிரபு கண்டித்திருக்கிறார்.
Recommended Video
ஏற்கனவே முழு ஊரடங்கில் தான் தமிழ்நாடு இருக்கிறது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கடைகளும் இருக்காது என அரசு போட்ட உத்தரவால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
லாக்டவுன்குள்ள லாக்டவுனா? மோசமான யோசனை.. மேலும் பாழாக்கும்.. கூட்டத்தை பார்த்து கடுப்பான நடிகை!
சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். இந்நிலையில், இப்படி மக்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல், பயத்தின் காரணமாக கூடி, வைரஸை தான் வாங்கி வருவார்கள் என்றுள்ளார்.
டிரெண்டாகும் ஹாஷ்டேக்
சென்னையில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில், அரசு திடீரென அறிவித்த இந்த அறிவிப்பால், சென்னை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் கடைகளை முற்றுகையிட திரண்டனர். சென்னையில் இதுநாள் வரையில் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்கள் எல்லாம் மளிகை பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக கூடியிருப்பது #panicbuying என்ற ஹாஷ்டேக் டிரெண்டாக காரணமாக அமைந்து விட்டது.
கொரோனா வாங்குறாங்க
அந்த ஹாஷ்டேக்கில் பலரும் இவர்கள் எல்லாரும் காய்கறிகள் வாங்குகிறார்களோ இல்லையோ, கொரோனாவை நிச்சயம் வாங்கிட்டு வீட்டுக்கு போயிடுவாங்க என்றும், கொரோனா மார்க்கெட் என்றும், அரசின் திட்டமிடாத அறிவிப்பால் வந்த வினை என்றும் பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை பதிவிட்டு தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
4 நாளும் பிரியாணி
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, ராம்கி, பிரேம்ஜி நடிப்பில் வெளியான படம் பிரியாணி. வெங்கட் பிரபுவுக்கும் மிகவும் பிடித்த உணவு பிரியாணி. அதனை மனதில் வைத்துக் கொண்டு, இவ்வளவு கூட்டமாக மக்கள் அள்ளிப் போட்டு மளிகை பொருட்களை வாங்குவதை பார்த்தால், 4 நாட்களும் வீட்டில் பிரியாணி தான் போலயே எனவும் கலாய்த்துள்ளார்.
உனக்கென்னப்பா
வெங்கட் பிரபுவின் இந்த ட்வீட்டை பார்த்தவுடன் ஒரு நெட்டிசன், உனக்கென்னப்பா வீட்டிலேயே பல மாதங்களுக்கு தேவையான அனைத்து விதமான ஐட்டங்களையும் வாங்கி தேக்கி வைத்திருப்பீர்கள் என்ற அர்த்தத்துடன் கமெண்ட் செய்ய, அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, ரசம் சோறு போதும் ப்ரோ.. பாதுகாப்பு முக்கியம் என பதிலளித்துள்ளார்.
வித்தியாசம் இருக்கு
இந்த கொரோனா அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை கொடுத்தாலும், லாக்டவுனில் சிக்கித் தவிக்கும் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வதில்லை. பணக்காரர்களின் நிலை வேற, ஏழை மக்களின் நிலை வேற, அவர்கள் எல்லாரும் பிரியாணி சமைக்க மட்டுமே கடைகளுக்கு இப்படி முண்டியடித்துக் கொண்டு செல்வதில்லை என வெங்கட் பிரபுவின் கருத்துக்கு எதிரான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.