Don't Miss!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மறுபடியும் நடிப்பிலிருந்து.... அப்போ டைரக்ஷன் அவ்ளோதானா வெங்கட் பிரபு...?
சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு, சென்னை 28 -2 என படங்களை இயக்கியிருந்தாலும், ஒரு நடிகராக அறிமுகமானவர்தான் வெங்கட் பிரபு.
இவற்றில் அவர் இயக்கிய மாசு படம் சொல்லிக் கொள்கிற மாதிரி அமையவில்லை. ஆனால் சென்னை 28 - 2-ல் விட்டதைப் பிடித்துவிட்டார். ஆனால் தன் இயக்கத்தில் அடுத்து என்ன படம் என்பதை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்.
இதற்கிடையில் நடிப்பு ஆசை மீண்டும் தலை தூக்கிவிட்டது போலிருக்கிறது. களவு என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் வெங்கட் பிரபு.
இந்தப் படத்தை முரளி கார்த்திக் இயக்குகிறார். "கொஞ்சம் கூட சினிமா தனம் இல்லாத ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு நடிக்கிறார். படத்துக்கு அந்தப் பாத்திரம் ரொம்ப பலமாக இருக்கும்," என்கிறார் முரளி கார்த்திக்.
ஏப்ரல் மாதத்தில், உன்னை சரணடைந்தேன் போன்ற படங்களில் நடித்துள்ள வெங்கட் பிரபு, இயக்குநரான பிறகு நடிக்கும் முதல் படம் இது.