Don't Miss!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சென்சார் பயம் இல்லை.. ‘நினைத்ததை’ காட்சிகளாக்கிய வெங்கட் பிரபு
வெங்கட்பிரபுவின் முதல் குறும்படம் செல்போன் ஆப் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய முதல் குறும்படமான 'மாஷா அல்லாஹ் கணேஷா' செல்போன் ஆப் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளித்திரை, சின்னத்திரைகளுக்கு போட்டியாக குறுந்திரையாக செல்போனிலேயே சினிமா மற்றும் சீரியல்களை பார்க்கும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இனி இதில் தான் எதிர்காலம் அதிகம் என்பதால், நாள்தோறும் இதில் புதிய ஆப்கள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் நேற்று வியு என்ற புதிய ஆப் தொடங்கப்பட்டது. இதில், 'டோர் எண் 403', 'கல்யாணமும் கடந்து போகும்',' நிலா நிலா ஓடி வா' ஆகிய தொடர்களும், நடிகர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'மாஷா அல்லாஹ் கணேஷா' என்ற குறும்படமும் ரிலீஸ் செய்யப்பட்டது.
சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்த வெங்கட்பிரபுவின் முதல் குறும்படம் இது ஆகும்.
அப்படியே தலைகீழ்:
இது குறித்து விழாவில் அவர் பேசுகையில், "வழக்கமா எல்லாரும் ஷார்ட் ஃபிலிம் எடுத்துட்டுதான் தமிழ் சினிமாவுக்கு வருவாங்க. நான் படங்கள் எடுத்துட்டு ஷார்ட்ஃபிலிம் எடுத்திருக்கேன். இது என்னோட முதல் ஷார்ட் ஃபிலிம்.
பாம்பே கலவரம்:
பாம்பே தாராவியில் இந்து-முஸ்லிம் கலவரத்தை சம்பந்தப்படுத்தின கதை இது. என்.டி.குமார் எழுதுன கதையுல நிறைய ஆராய்ச்சிகள் செஞ்சிருக்கோம். இப்படத்தின் வசனங்களை விஜி எழுதியிருக்கிறார். பிரவின் கே.எல் படத்தொகுப்புல, பிரேம்ஜி இசையமிச்சிருக்காரு.
சென்சார் பிரச்சினை இல்லை:
இது போன்ற பிளாட்பார்ம்கள் மூலம், சென்சார் பிரச்சினை இல்லை. இதனால் நாங்கள் சொல்ல வரும் விஷயங்களை அப்படியே ஆடியன்ஸுக்கு சொல்ல முடிகிறது. இதே படத்தை முழு நீளத் திரைப்படமாக எடுத்து, சென்சாருக்கு சென்றால் நிச்சயம் படம் ரிலீசாக வாய்ப்பே இல்லை. இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் பல இளம் திறமையாளர்களுக்கு புதிய வாசலைத் திறந்து வைக்கிறது" என்றார்.
பார்ட்டி:
வெங்கட்பிரபு தற்போது பார்ட்டி பட ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதனைத் தொடர்ந்து சிம்புவை நாயகனாக்கி மாநாடு என்ற புதிய படத்தை இயக்குறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் இக்குறும்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.