Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் அம்பரீஷ் நலமுடன் உள்ளார்.. வதந்திகளை நம்ப வேண்டாம்! - மனைவி சுமலதா விளக்கம்
பெங்களூர்: பிரபல கன்னட நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான அம்பரீஷ் உடல்நிலை இப்போது சீரடைந்துள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது மனைவி சுமலதா கூறியுள்ளார்.
கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை அமைச்சராக இருப்பவர் நடிகர் அம்பரீஷ்.
புகைப்பழக்கம் காரணமாக அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நோய் தொற்றை அகற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.
அத்துடன் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளது. டியூப் மூலம் திரவ உணவு செலுத்தப்படுகிறது.
வதந்தி
இதற்கிடையே, அம்பரீஷ் உடல்நிலை குறைத்து பல்வேறு வதந்திகள் இன்று காலை பரவின. இவற்றை மறுத்த அவர் மனைவி சுமலதா, "அவரது உடல்நிலை இப்போது சரியாக இருக்கிறது. வதந்திகளை நம்ப வேண்டாம்," என்றார்.
அம்பரீஷ் கன்னட படங்களில் முன்னணி நடிகராக இருந்தவர். தமிழில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த 'ப்ரியா' படத்திலும் நடித்துள்ளார். இதில் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக வந்தார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். முன்னாள் கதாநாயகி சுமலதாவின் கணவர்.
கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் 208 படங்கள் நடித்துள்ளார் அம்பரீ்ஷ்.
மூன்று முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பரீஷ், கடந்த 2006லிருந்து 2008 வரை மத்திய அமைச்சராகவும் இருந்தார். காவிரி பிரச்சினைக்காக தன் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினராகவும் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் உள்ளார்.