மூத்த பழம் பெரும் நடிகர் ஜோக்கர் துளசி காலமானார் !
சென்னை : மூத்த நகைச்சுவை நடிகர் ஜோக்கர் துளசி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
Recommended Video
கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
மூத்த பழம் பெரும் நடிகரின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடகக்கலைஞர்
பழம் பெரும் மூத்த நாடகக் கலைஞரான இவர் கண்மணி என்ற நாடகக்குழுவில் முதல்முதலாக நடிகராக அறிமுகமாகி பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். தேவராஜ் மோகன் இயக்கிய உங்களில் ஒருத்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார் துளசி.

நடித்துள்ளார்
இதையடுத்து, இவர் சாமுண்டி திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது. இதையடுத்து, திருமதி பழனிச்சாமி, புருஷன் பொண்டாட்டி, இளைஞர் அணி, அவதாரப்புருஷன், தமிழச்சி . புதுமைப் பித்தன், நம்ம ஊரு பூவாத்தா, நீலக்குயில்,மருதுபாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில்
இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் தனது புகழை நிலைநாட்டிய துளசி. வாணி ராணி, கேளடி கண்மணி, முத்தாரம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வருகிறார்.

உயிரிழந்தார்
இந்நிலையில், உடலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த ஜோக்கர் துளசி,சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











