Don't Miss!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மூத்த பழம் பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார் !
சென்னை : மூத்த பழம் பெரும் நடிகர் கல்தூண் திலக் கொரோனா தொற்றால் காலமானார்.
அவருக்கு வயது 78, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார்.
முதல் பால்லயே சிக்ஸர்.. புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து!
இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபலமானார்
1981ம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான 'கல்தூண்' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் திலக், அந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கல்தூண் திலக் என்று பிரபலமாக அறியப்பட்டார்.
பல படங்களில்
டைகர் தாத்தாச்சாரி, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது ஆறிலிருந்து அறுபது வரை, பேர் சொல்லா ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை என சுமார் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படத்தில் ஆர்.கே பகவதியின் மகனாக நடித்திருப்பார். பெரும்பாலும் எதிர்மறையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
பல தொடர்களில்
சினிமாத்துறையில் 74 ஆண்டு அனுபவம் வாய்ந்த திலக், ஏவிஎம் ஸ்டூடியோவில் உதவி படத்தொகுப்பாளராக சிறிது காலம் பணியாற்றி உள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இன்று காலமானார்
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கல்தூண் திலக் இன்று காலமானார். அவருக்கு வயது 78 ஆகியது. மூத்த பழம் பெரும் நடிகர் திலக்கின் மறைவுக்கு திரையிலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனாவின் 2வது அலையில் சிக்கி திரையுலகைச் சேர்ந்த பலரும் உயிரிழந்து வருவது திரைத்துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.