Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மூத்த பழம் பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார் !
சென்னை : மூத்த பழம் பெரும் நடிகர் கல்தூண் திலக் கொரோனா தொற்றால் காலமானார்.
அவருக்கு வயது 78, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார்.
முதல் பால்லயே சிக்ஸர்.. புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து!
இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபலமானார்
1981ம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான 'கல்தூண்' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் திலக், அந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கல்தூண் திலக் என்று பிரபலமாக அறியப்பட்டார்.
பல படங்களில்
டைகர் தாத்தாச்சாரி, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது ஆறிலிருந்து அறுபது வரை, பேர் சொல்லா ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை என சுமார் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படத்தில் ஆர்.கே பகவதியின் மகனாக நடித்திருப்பார். பெரும்பாலும் எதிர்மறையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
பல தொடர்களில்
சினிமாத்துறையில் 74 ஆண்டு அனுபவம் வாய்ந்த திலக், ஏவிஎம் ஸ்டூடியோவில் உதவி படத்தொகுப்பாளராக சிறிது காலம் பணியாற்றி உள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இன்று காலமானார்
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கல்தூண் திலக் இன்று காலமானார். அவருக்கு வயது 78 ஆகியது. மூத்த பழம் பெரும் நடிகர் திலக்கின் மறைவுக்கு திரையிலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனாவின் 2வது அலையில் சிக்கி திரையுலகைச் சேர்ந்த பலரும் உயிரிழந்து வருவது திரைத்துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.