Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘ரஜினிகாந்தா' படம் மூலம் பிரபலமான.. பழம்பெரும் நடிகை வித்யா சின்ஹா காலமானார்!
பழம்பெரும் இந்தி நடிகை வித்யா சின்ஹா காலமானார்.
மும்பை: பழம்பெரும் இந்தி நடிகை வித்யா சின்ஹா உடல் நலக்குறைவால் காலமானார்.
தனது 18 வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் வித்யா சின்ஹா (71). ஆரம்பத்தில் மாடலாக இருந்தவர் பின்னர், நடிகையாக மாறினார். 1974-ல் வெளியான பாசு சாட்டர்ஜியின் 'ரஜினிகாந்தா' படம் அவருக்கு நல்ல புகழை பெற்றுத் தந்தது.
இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த அவர், 1986-ல் ஜீவா என்ற இந்தி படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து நடிப்புக்கு ஓய்வு கொடுத்த வித்யா, மீண்டும் கடந்த 2011-ல் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'பாடி கார்டு' திரைப்படத்தில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.
வயோதிகம் காரணமாக நீண்டகாலமாக உடல்நலப் பிரச்சினைகளால் வித்யா சிரமப்பட்டு வந்தார். அவருக்கு நுரையீரல் மற்றும் இதய பாதிப்பு இருந்தது. அதற்கான தொடர் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று அவரது உடல்நிலை மோசமாகவே, உடனடியாக சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.
மறைந்த வித்யா சின்ஹாவுக்கு ஜான்வி என்ற மகள் உள்ளார். வித்யாவின் மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.