Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
’எதிர்நீச்சல்’ நாயகி.. பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி.. கொரோனா பாதிப்பு இல்லையாம்
பெங்களூரு: நீர்க்குமிழி, எதிர்நீச்சல் என நடிகர் நாகேஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் மற்றும் கன்னட சூப்பர்ஸ்டார்களுடன் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கமலா குமாரி என்ற தனது இயற்பெயரை ஜெயந்தி என சினிமாவுக்காக மாற்றிக் கொண்டார்.
ஆஸ்த்மா மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக தற்போது அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
டைட்டிலே செம சமாச்சாரமா இருக்கே.. சாந்தனுவின் 'முருங்கைகாய் சிப்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
75 வயதாகும் நடிகை ஜெயந்திக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என மருத்துவமனை அறிவித்துள்ளதாக அவரது மகன், கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் நடிகை ஜெயந்தியின் மகன் கூறியுள்ளார்.