Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்
சென்னை: எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகை குசலகுமாரி சென்னையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை குசலகுமாரி (83). எம்.ஜி.ஆர்- சிவாஜி இணைந்து நடித்த கூண்டுக்கிளி படத்தில் இரண்டு நாயகிகளுள் ஒருவராக நடித்திருந்தார்.
அது மட்டுமின்றி, எம்.ஜி.ஆரின் மதுரை வீரன், சிவாஜி கணேசனுடன் பராசக்தி, கள்வனின் காதலி, ஹரிச்சந்திரா மற்றும் கொஞ்சும் சலங்கை, அவ்வையார் உள்பட பல படங்களிலும், மன்மத லீலை படத்தில் கமல்ஹாசனின் மாமியார் வேடத்திலும் இவர் நடித்து இருந்தார்.
மலையாளத்தில் பிரேம் நசீர், தெலுங்கில் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ் என முன்னணி நடிகர்கள் பலருடன் இவர் நடித்துள்ளார்.
முறைப்படி பரத நாட்டியம் கற்றவரான குசலகுமாரி, கொஞ்சும் சலங்கை படத்தில் ஆடிய போட்டி நடனம் பிரபலம். சாவித்திரிக்கு முன்பே மிகவும் வேகமாக கார் ஓட்டும் நடிகை என்ற பெருமை பெற்றவர் இவர்.
பாவம்யா இந்த ஜூலி.. மகளிர் தின வாழ்த்து சொன்னது ஒரு குத்தமா.. இப்டி திட்டுறீங்களேப்பா!
திருமணமே செய்து கொள்ளாமல் தனது தம்பி குடும்பத்துடன் சென்னை நந்தனம் பழைய டவர் கிளாக் கட்டிடத்தில் 6-வது மாடியில் சகோதரர் கமலசேகர் வீட்டில் வசித்து வந்தார் குசலகுமாரி. தற்போது 83 வயதான இவர் சமீபகாலமாக முதுமை காரணமாக உடல்நலக்குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. குசலகுமாரியின் உடல் நேற்று பகல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குசலகுமாரியின் மற்றும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!