திடீர் மாரடைப்பு காரணமாக பிரபல மூத்த நடிகர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. திரையுலகம் இரங்கல்!
மும்பை: திடீர் மாரடைப்பு காரணமாக பிரபல நடிகர் மரணமடைந்ததை அடுத்து திரையுலகிலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா காலகட்டம் சினிமா துறையினருக்கு மோசமான காலகட்டமாக அமைந்து விட்டது.
முன்னணி திரைத்துறையினர் சிலர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமா கலைஞர்கள்
இதனால் கடந்த வருடத்தை கொடூரமான வருடமாக பொதுமக்களுடன் சினிமா துறையினரும் கருதினர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாவின் முக்கியமான சினிமா கலைஞர்கள் உயிரிழந்தனர். நடிகர் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புத், எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குனர் சச்சி உட்பட பலர் பலியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.

இந்திரஜித் டெப்
இது சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இப்போது, பிரபல வங்காள நடிகர், இந்திரஜித் டெப், திடீர் மாரடைப்பு காரணமாக, மரணமடைந்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள கோல்பார்க்கில் உள்ள வீட்டில் இருந்த
போது, மாரடைப்பு ஏற்பட்டது. இவருக்கு ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சனை இருந்து வந்தது.

மூத்த நடிகர்
அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவருக்கு வயது 73. இவர் மனைவி கடந்த ஒரு வருடத்துக்கு முன்
மரணமடைந்திருந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் தனியாக வசித்து
வந்தார். மூத்த நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது வங்காள சினிமாவில் சோகத்தை
ஏற்படுத்தி உள்ளது.

தேரோ பார்பன்
மறைந்த இந்திரஜித் டெப், தேரோ பார்பன் என்ற வங்காள டிவி தொடர் மூலம்
நடிப்பை தொடங்கியவர். பல டிவி தொடர்களிலும் சினிமா படங்களிலும் நடித்துள்ள
இவர், நாடகங்களிலும் வெப் சிரீஸ்களிலும் நடித்துள்ளார். அவர் மறைவை அடுத்து
வங்காள திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











