Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ஏ வின்சென்ட் மரணம்
மூத்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஏ வின்சென்ட் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
தமிழில் யார் பையன், உத்தம புத்திரன், கல்யாணப் பரிசு, விடிவெள்ளி, தேன் நிலவு, போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வின்சென்ட்.
ஸ்ரீதர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தார்.
அமரர் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண் போன்ற படங்களுக்கும், சிவாஜி கணேசன் நடித்த கவுரவம், வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏராளமான தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள வின்சென்ட், 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இரு வீடுகள், எங்களுக்கும் காலம் வரும், நாம் பிறந்த மண், திருமாங்கல்யம் போன்றவை இவர் இயக்கிய தமிழ்ப் படங்களில் சில. மலையாளத்தில் பல படங்கள் இயக்கியுள்ளார்.
1997-ம் ஆண்டு அன்னமய்யா தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததோடு, ஓய்வை அறிவித்தார்.
2003-ம் ஆண்டு இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் இவருக்கு கவுரவ உறுப்பினர் பதவி அளித்தது. பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஜெயனன் வின்சென்ட் மற்றும் அஜயன் வின்சென்ட் இவரது மகன்களாகும்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வின்சென்ட் இன்று மரணமடைந்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் வின்சென்டின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.