Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து "இளைய தலைமுறை"மற்றும் அக்கரை பச்சை,வடைமாலை,ஆகிய படங்களை தயாரித்த பட அதிபர் ஜி.கே.தர்மராஜன் நேற்று மூச்சுச் தினறல் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77 அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.
சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜன் நேற்று காலமானார். அவருக்கு வயது 77. சிவாஜி நடித்த இளைய தலைமுறை, அக்கரை பச்சை, வடைமாலை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் தர்மராஜன். நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசித்து வந்த அவர். கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றி இருந்தார். நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு சாவித்ரி என்ற மனைவி உள்ளார். இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.
தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜன் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர். கவிஞர் வாலியையும் பிரபல ஒளிப்பதிவாளர் மாருதிராவையும் இணைத்து " வடைமாலை " என்ற படத்தின் மூலம் "மாருதி -வாலி " என்று இயக்குனர்களாக அறிமுகப்படுத்தியவர்.
எமர்ஜென்சி காலத்தில் வந்த படம் தான் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த "இளைய தலைமுறை " என்ற படம், "இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரை பச்சை" என்று எம்.எஸ். விசுவநாதன் கணீரென்று பாடிய படம் தான் "அக்கரை பச்சை.
எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்க விரும்பினார். இதற்காக அவருடன் ஒப்பந்தமும் செய்தார். இளையராஜாவை இனசயமைப்பாளராகவும், கவிஞர் வாலி கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுத மாருதி ராவ் ஒளிப்பதிவை கவனிக்க கே.சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக படத்துவக்க விழாவை பிரசாத் ஸ்டுடியோவில் நடத்தினார்.
நாஞ்சில் மனோகரன் தலைமை தாங்கினார். முதல்வரான எம்.ஜி.ஆரும் துவக்க விழாவில் கலந்து கொண்டார். பாடல் பதிவும் நடந்து முடிந்தது. ஆனால் அந்த படம் நின்று விட்டது. அந்த விரக்தியில் சினிமாவை விட்டு விலகினார் ஜி.கே.தர்மராஜன். இந்த நிலையில் உடல் நலம் குன்றியிருந்த தர்மராஜன் 77 வயதில் நேற்று மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.