Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கொரோனா மருத்துவமனையில் பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. பிரபலங்கள் இரங்கல்!
சென்னை: கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இருந்தும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கைது செய்யப்பட்ட நடிகை ரியாவுக்கு கொரோனா டெஸ்ட்.. பரபரப்பாகச் சுத்தம் செய்யப்பட்ட சிறப்பு லாக்கப்!
உலகம் முழுவதும்
இந்த உயிர்கொள்ளி வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. உலகளவில் 2.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு எற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.27 லட்சத்தை தாண்டி உள்ளது.
ஜெனிலியா
கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த கொரோனா வைரஸுக்கு பிரபலங்கள் பலர், பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நடிகைகள் நிக்கி கல்ராணி, ஜெனிலியா, நடிகர் விஷால், இயக்குனர் ராஜமவுலி உள்பட பலர் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.
நடிகர் அஜித் தாஸ்
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் அஜித் தாஸுக்கு கொரோனா பாதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனாவுக்கான தனியார் மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்த அவர் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 71.
ஒடிசா முதலமைச்சர்
அவர் கொரோனாவால்தான் உயிரிழந்தாரா என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. அவர் மறைவை அடுத்து ஒடிசா முதலமைச்சர், நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரதாப் சாரங்கி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏராளமான ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
ஸ்கூல் ஆஃப் டிராமா
மறைந்த அஜித் தாஸ், நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் நடிப்பு பயின்றவர். சுமார் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல படங்களை தயாரித்தும் உள்ளார். கடைசியாக அவர் இஷ்க் புனி தாரே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. மறைந்த அஜித் தாஸூக்கு மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.