பழம்பெரும் மலையாளப் பாடகர் உதயபானு மரணம்

கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
அகில இந்திய வானொலியில் நிலைய கலைஞராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1950-ம் ஆண்டு நாயரு பிடிச்ச புலிவாலு படம் மூலம் பாடகராக அறிமுகமான உதயபானு, 1960, 1970களில் மலையாள திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார்.
1987-ல் கேரள சங்கீத நாடக அகாடமி விருதினையும், 2009-ம் ஆண்டு பத்மய விருதையும் பெற்றார் உதயபானு.
2010-ம் ஆண்டு தாந்தோனி என்ற படத்தில் இடம்பெற்ற 'பரஞ்ஞோடும்...' பாடல்தான் கடைசியாக அவர் பாடியது.


Click it and Unblock the Notifications











