Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகரும், கவிஞருமான அமரசிகாமணி காலமானார்
சென்னை : நடிகரும், கவிஞருமான அமரசிகாமணி சென்னையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். இந்த தகவலை அவரது மகன் பார்த்திப அமரசிகாமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
டிவி சீரியல்கள், சினிமாக்கள் ஆகியவற்றில் நடித்துள்ள அமரசிகாமணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 70. கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமரசிகாமணி, சிகிச்சை பலனின்றி இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவர் மனைவி ஹியாமளா தேவி, 3 மகன்கள் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி தனது கவிதைகளுக்காகவும் பல விருதுகளை பெற்றுள்ளார் அமரசிகாமணி. இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.
ரஜினி நடித்த சிவாஜி, விஜயகாந்த் நடித்த ரமணா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் அமரசிகாமணி நடித்துள்ளார். இது தவிர சொந்தம், உறவுகள், பொன்னூஞ்சல் உள்ளிட்ட புகழ்பெற்ற பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அமரசிகாமணியின் மறைவிற்கு திரையுலக மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் இறுதிச்சடங்குகள் நேற்று மாலை சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.