Don't Miss!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகரும், கவிஞருமான அமரசிகாமணி காலமானார்
சென்னை : நடிகரும், கவிஞருமான அமரசிகாமணி சென்னையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். இந்த தகவலை அவரது மகன் பார்த்திப அமரசிகாமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
டிவி சீரியல்கள், சினிமாக்கள் ஆகியவற்றில் நடித்துள்ள அமரசிகாமணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 70. கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமரசிகாமணி, சிகிச்சை பலனின்றி இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அவர் மனைவி ஹியாமளா தேவி, 3 மகன்கள் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி தனது கவிதைகளுக்காகவும் பல விருதுகளை பெற்றுள்ளார் அமரசிகாமணி. இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.
ரஜினி நடித்த சிவாஜி, விஜயகாந்த் நடித்த ரமணா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் அமரசிகாமணி நடித்துள்ளார். இது தவிர சொந்தம், உறவுகள், பொன்னூஞ்சல் உள்ளிட்ட புகழ்பெற்ற பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அமரசிகாமணியின் மறைவிற்கு திரையுலக மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் இறுதிச்சடங்குகள் நேற்று மாலை சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.