Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகரும், கவிஞருமான அமரசிகாமணி காலமானார்
சென்னை : நடிகரும், கவிஞருமான அமரசிகாமணி சென்னையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். இந்த தகவலை அவரது மகன் பார்த்திப அமரசிகாமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
டிவி சீரியல்கள், சினிமாக்கள் ஆகியவற்றில் நடித்துள்ள அமரசிகாமணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 70. கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமரசிகாமணி, சிகிச்சை பலனின்றி இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அவர் மனைவி ஹியாமளா தேவி, 3 மகன்கள் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி தனது கவிதைகளுக்காகவும் பல விருதுகளை பெற்றுள்ளார் அமரசிகாமணி. இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.
ரஜினி நடித்த சிவாஜி, விஜயகாந்த் நடித்த ரமணா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் அமரசிகாமணி நடித்துள்ளார். இது தவிர சொந்தம், உறவுகள், பொன்னூஞ்சல் உள்ளிட்ட புகழ்பெற்ற பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அமரசிகாமணியின் மறைவிற்கு திரையுலக மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் இறுதிச்சடங்குகள் நேற்று மாலை சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.