Don't Miss!
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நயனதாரா நடித்த ஸ்ரீராமராஜ்யம் பட இயக்குநர் பாபு காலமானார்
சென்னை: பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பாபு (வயது 81) மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 80.
1933-ம் ஆண்டு பிறந்த பாபுவின் இயற்பெயர் சத்திராஜு லக்ஷ்மி நாராயணா. திரையுலகில் இவரை அனைவரும் பாபு என்று அழைத்தனர். இவருக்கு பானுமதி என்ற மகளும், வேணுகோபால், வெங்கட்ரமணன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
என்.டி.ராமாராவ், சிரஞ்சீவி, நாகேஷ்வர ராவ், அனில்கபூர், ஸ்ரீகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை இயக்கிய பாபு, தமிழில் 'நீதி தேவன் மயங்குகிறான்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
பாலகிருஷ்ணா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'ஸ்ரீராம ராஜ்யம்'உட்பட 51 படங்களை அவர் இயக்கியுள்ளார்.
2013-ம் ஆண்டில் பத்மஸ்ரீவிருது, ஆந்திர பல்கலைக்கழகம் வழங்கிய கலா பிரபூர்ணா விருது உட்பட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு தெலுங்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏராளமான நடிகர், நடிகையர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாபுவின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.