Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால் யாருக்கு ஆதரவு? எடப்பாடி பழனிசாமி பரபர திட்டம்!
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Finance ஆதார் கார்டு மோசடி.. சிக்குனா "சிக்கன்" ஆகிடுவீங்க!
- Lifestyle ராம நவமி 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் சிறப்பு என்ன தெரியுமா?
- Automobiles இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரில்லா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
- Sports IPL 2024 : ஐபிஎல் தொடரில் எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத சாதனையை செய்த சுனில் நரைன்
- Technology மிரட்டிவிட்டாப்ல மோட்டோ.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. QUAD ஷூட்டர்.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
கோட்டா நீலிமாவின் பிரபல அரசியல் நாவலைப் படமாக்கும் வெற்றிமாறன்!
எழுத்தாளர்களின் நாவல்களைப் படமாக்கும் கலை வெற்றிமாறனுக்கு நன்றாகவே கைவந்துவிட்டது. சந்திரகுமாரின் லாக்கப் நாவலை விசாரணை என்ற படமாக எடுத்து நல்ல பெயரையும் பெற்றுவிட்ட வெற்றி மாறன் அடுத்து ஒரு பிரபல நாவலைப் படமாக்குகிறார்.
அந்த நாவலின் பெயர் ஷூஸ் ஆப் தி டெத் (Shoes of the Dead). எழுதியவர் கோட்டா நீலிமா. சண்டே கார்டியன் பத்திரிகையின் அரசியல் ஆசிரியராக இருப்பவர் நீலிமா. இது முழுக்க முழுக்க அரசியல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் தற்கொலை, அதற்குப் பின்னால் உள்ள அரசியல் பற்றிப் பேசும் துணிச்சலான நாவல் இது.
இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வெற்றிமாறன், "கோட்டா நீலிமாவின் நாவலைப் படமாக்கும் உரிமையைப் பெற்றுள்ளேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது நாவலைப் படமாக்க தேர்வு செய்ததற்காக வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கோட்டா நீலிமா.
இந்தப் படத்தை வெற்றிமாறன் தனியாகவே தயாரிக்கிறார். இதற்கு முன் இரு படங்களை அவர் தனுஷுடன் சேர்ந்து தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.