Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
கோட்டா நீலிமாவின் பிரபல அரசியல் நாவலைப் படமாக்கும் வெற்றிமாறன்!
எழுத்தாளர்களின் நாவல்களைப் படமாக்கும் கலை வெற்றிமாறனுக்கு நன்றாகவே கைவந்துவிட்டது. சந்திரகுமாரின் லாக்கப் நாவலை விசாரணை என்ற படமாக எடுத்து நல்ல பெயரையும் பெற்றுவிட்ட வெற்றி மாறன் அடுத்து ஒரு பிரபல நாவலைப் படமாக்குகிறார்.
அந்த நாவலின் பெயர் ஷூஸ் ஆப் தி டெத் (Shoes of the Dead). எழுதியவர் கோட்டா நீலிமா. சண்டே கார்டியன் பத்திரிகையின் அரசியல் ஆசிரியராக இருப்பவர் நீலிமா. இது முழுக்க முழுக்க அரசியல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் தற்கொலை, அதற்குப் பின்னால் உள்ள அரசியல் பற்றிப் பேசும் துணிச்சலான நாவல் இது.
இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வெற்றிமாறன், "கோட்டா நீலிமாவின் நாவலைப் படமாக்கும் உரிமையைப் பெற்றுள்ளேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது நாவலைப் படமாக்க தேர்வு செய்ததற்காக வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கோட்டா நீலிமா.
இந்தப் படத்தை வெற்றிமாறன் தனியாகவே தயாரிக்கிறார். இதற்கு முன் இரு படங்களை அவர் தனுஷுடன் சேர்ந்து தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.