Just In
- 4 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 4 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 5 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 6 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படம் ஜெயமோகன் எழுதிய கதையில் இருந்து உருவாகிறது.
தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த 'அசுரன்' ஹிட்டுக்குப் பிறகு, அடுத்தப் படத்தை தொடங்க இருந்தார் வெற்றிமாறன்.
சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை அவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

குளறுபடிகள் நடந்தன
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் பல குளறுபடிகள் நடந்தன. இதனால், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை விட்டுவிட்டு, சூரி நடிக்கும் படத்தை இயக்க வெற்றிமாறன் முடிவு செய்தார். அதற்கு முன்பாக, பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார், சூர்யா.

அரபு நாடு கதை
அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கிடையே, முதலில் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை கதையாக்கி சூரி நடிப்பில் படமாக்க இருந்தார், வெற்றிமாறன். அது அரபு நாடொன்றில் வேலைபார்க்கும் ஒருவரின் கதை. துபாய்க்கு ஷூட்டிங் செல்ல இருந்த நிலையில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கதையை மாற்றினார்
இதனால், வெளிநாடு சென்று படமாக்கும் வாய்ப்பில்லை என்பதால், சூரி நடிக்கும் படத்தின் கதையை மாற்றினார் வெற்றிமாறன். சிறுகதை மற்றும் நாவல்களை படமாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர் அவர். லாக்கப் நாவலை, விசாரணை என்ற பெயரில் படமாக்கிய அவர், வெக்கை நாவலை 'அசுரன்' ஆக்கினார்.

ஜெயமோகன் சிறுகதை
வாடிவாசல் நாவலை அதே பெயரில் படமாக்க இருக்கிறார். இந்நிலையில், இப்போது எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை ஒன்றைப் படமாக்குகிறார். இந்த சிறுகதை பல வருடங்களுக்கு முன் வார இதழ் ஒன்றில் வெளியானது. இதில், நடிகர் சூரி போலீஸ்காரராகவும், பாரதிராஜா புரட்சியாளராகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

திட்டமிட்டபடி தொடங்கும்
இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதம் சத்யமங்கலம் காடுகளில் தொடங்குகிறது. ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்துள்ளனர். இதை முடித்துவிட்டு, வாடிவாசலை அவர் தொடங்குவார் எனத் தெரிகிறது. வாடிவாசல் படம் டிராப் என்று வந்த செய்தியை சமீபத்தில் மறுத்திருந்த தயாரிப்பாளர் தாணு, அது திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.