Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படம் ஜெயமோகன் எழுதிய கதையில் இருந்து உருவாகிறது.
தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த 'அசுரன்' ஹிட்டுக்குப் பிறகு, அடுத்தப் படத்தை தொடங்க இருந்தார் வெற்றிமாறன்.
சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை அவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
குளறுபடிகள் நடந்தன
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் பல குளறுபடிகள் நடந்தன. இதனால், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை விட்டுவிட்டு, சூரி நடிக்கும் படத்தை இயக்க வெற்றிமாறன் முடிவு செய்தார். அதற்கு முன்பாக, பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார், சூர்யா.
அரபு நாடு கதை
அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கிடையே, முதலில் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை கதையாக்கி சூரி நடிப்பில் படமாக்க இருந்தார், வெற்றிமாறன். அது அரபு நாடொன்றில் வேலைபார்க்கும் ஒருவரின் கதை. துபாய்க்கு ஷூட்டிங் செல்ல இருந்த நிலையில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கதையை மாற்றினார்
இதனால், வெளிநாடு சென்று படமாக்கும் வாய்ப்பில்லை என்பதால், சூரி நடிக்கும் படத்தின் கதையை மாற்றினார் வெற்றிமாறன். சிறுகதை மற்றும் நாவல்களை படமாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர் அவர். லாக்கப் நாவலை, விசாரணை என்ற பெயரில் படமாக்கிய அவர், வெக்கை நாவலை 'அசுரன்' ஆக்கினார்.
ஜெயமோகன் சிறுகதை
வாடிவாசல் நாவலை அதே பெயரில் படமாக்க இருக்கிறார். இந்நிலையில், இப்போது எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை ஒன்றைப் படமாக்குகிறார். இந்த சிறுகதை பல வருடங்களுக்கு முன் வார இதழ் ஒன்றில் வெளியானது. இதில், நடிகர் சூரி போலீஸ்காரராகவும், பாரதிராஜா புரட்சியாளராகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
திட்டமிட்டபடி தொடங்கும்
இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதம் சத்யமங்கலம் காடுகளில் தொடங்குகிறது. ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்துள்ளனர். இதை முடித்துவிட்டு, வாடிவாசலை அவர் தொடங்குவார் எனத் தெரிகிறது. வாடிவாசல் படம் டிராப் என்று வந்த செய்தியை சமீபத்தில் மறுத்திருந்த தயாரிப்பாளர் தாணு, அது திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்