Don't Miss!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்!
Recommended Video
சென்னை: வட சென்னை திரைப்படத்திற்குப் பிறகும் மீண்டும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி தொடர உள்ளது.
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் வட சென்னை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வரும் மூன்றாவது படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் கதையை வெற்றிமாறன் படமாக்க உள்ளார். இரண்டு கதாபாத்திரங்கள் கதை முழுதும் பயணிக்கும் நாவல் "வெக்கை".
ஒரு பதினைந்து வயது சிறுவன், நாவலின் தொடக்கத்திலேயே ஒருவரை கொடூரமாக கொலை செய்கிறான். அந்த கொலையை அவனுடைய தந்தையோ, தாயோ, மாமாவோ அதை குற்றமாகக் கருதவில்லை. குற்றமாக நினைக்காததற்கான காரணம் பிறகு நாவலில் விரியும். கொலை செய்ததனால் கதை முழுக்க சிறுவனும், தந்தையும் ஓடி ஒளிந்துகொண்டே இருக்கிறார்கள். ஓடி ஒளிவதைத் தாண்டி படிப்பவர்களுக்கு தந்தை மகன் உறவில் இருக்கும் அன்பு மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இதில் தனுஷ் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றொரு கதாபாத்திரம் யார் எனத் தெரியவில்லை. வெற்றிமாறன் ஒரு நாவல்டி இயக்குனர் என்பதால் இக்கதையின் சாரத்தை உணர்ந்து சொல்லவரும் கருத்தை பிசகாமால் எடுப்பார் என நம்பலாம்.
இயக்குனரின் அட்டூழியத்தை அவர் தட்டிக்கேட்கவில்லை: பேட்ட நடிகர் மீது நடிகை புகார்
வட சென்னை இரண்டாம் பாகம் வருவதற்கு முன்பே இப்படத்தின் வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கான போட்டோ ஷூட் இம்மாத இறுதியில் நடக்க உள்ளதாம்.