Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நுரையீரல் புற்றுநோய்.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!
மும்பை: நுரையீரல் புற்றுநோய் காரணமாக, சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்பட பலர் திடீரென உயிரிழந்துள்ளனர்.
பிக் பாஸ் வீட்டுக்கு வரப் போகும் பிரபல மாடல் அழகி.. யாரு இந்த சம்யுக்தா? எகிறும் எதிர்பார்ப்பு!
புபேஷ் குமார் பாண்டியா
கடந்த சில மாதங்களாக இந்த திடீர் மரணங்கள் சினிமாதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு நடிகர் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் புபேஷ்குமார் பாண்டியா. பிரபல நாடக நடிகர், சினிமாவிலும் நடித்து வந்தார். விக்கி டோனர், பர்மனு, ஹஸாரோன் கவாஹிஷீன் ஐசி உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
நுரையீரல் புற்றுநோய்
தேசிய நாடகப்பள்ளி மாணவரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நுரையீரல் புற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை மோசமானது. சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் அதிகரித்ததால், அவர் குடும்பத்தினர் தவித்தனர்.
சினிமா பிரபலங்கள்
இதையடுத்து அவருடைய நண்பரும் நடிகருமான மனோஜ் பாஜ்பாய், புபேஷ்குமாரின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவுமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்திருந்தார். இதை நடிகர் அடில் ஹூசைன், ராஜேஷ் தைலங் ஷேர் செய்திருந்தனர். இதையடுத்து சில சினிமா பிரபலங்கள் உதவி வந்தனர்.
தேசிய நாடகப் பள்ளி
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதை தேசிய நாடகப் பள்ளி, தனது ட்விட்டர் தளத்தில் உறுதி செய்தது. 'புபேஷ் குமார் பாண்டியா (முன்னாள் மாணவர், 2201 பேட்ச்) இறந்த செய்தி வருத்தமாக இருக்கிறது. தேசிய நாடகப்பள்ளி குடும்பம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திகிறோம் என்று கூறியுள்ளது.
மனோஜ் பாஜ்பாய்
மறைந்த நடிகர் புபேஷ்குமாருக்கு சாயா பாண்டியா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். அவர் மறைவுக்கு 'அஞ்சான்' வில்லன் மனோஜ் பாஜ்பாய், முகேஷ் சப்ரா, கஜ்ராஜ் ராவ், இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்பட பல திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.