மகா குரு உடலால் மறைந்தாலும் இசையால் வாழ்வார்.. பாலமுரளி கிருஷ்ணா உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி- வீடியோ

சென்னை: பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா (86), சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுச் செய்தி குறித்து அறிந்த பிரபலங்கள், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் அவரிடம் இசை கற்றுக் கொண்ட நடிகர் கமல், பாடகர் ஜேசுதாஸ் உள்ளிட்டோரும் நேரில் தங்களது அஞ்சலியைத் தெரிவித்தனர். முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் கமல், "இசையால் பல லட்சம் பேரை வசீகரித்த 'மகா குரு' முரளி கிருஷ்ணா உடலால் மறைந்தாலும் அவரது இசை இந்த உலகில் ஒலித்துகொண்டே இருக்கும்" என தனது குருவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X