பலே வெள்ளையத் தேவாவில் ஜாலியாக நடித்தோம்... ரோகிணி - வீடியோ
சென்னை: பலே வெள்ளையத் தேவா படத்தில் ஜாலியாக நடித்தோம் என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.
புதுமுக இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பலே வெள்ளையத் தேவா'. தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார்.
தேனியில் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை ரோகினி படத்தில் அனைவரும் ஜாலியாக நடித்ததாக தெரிவித்தார்.
படத்தின் நாயகி தான்யா பேசும் போது சசிகுமார், கோவை சரளா, ரோகினி, சங்கிலி முருகன் ஆகியோருடன் நடித்தது பெருமையாக உள்ளதாக கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய கோவை சரளா, சசிகுமாரின் புரடக்ஷன் கம்பெனியை புகழ்ந்து தள்ளினார். படப்பில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக கூறிய அவர், உடன் நடித்தவர்களையும் புகழ்ந்து பேசினார்.


Click it and Unblock the Notifications











