twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெமினி உயிரோடு இருந்திருந்தால் ‘ரெமோ’வைக் காதலித்திருப்பார்... கே.எஸ்.ரவிக்குமார்- வீடியோ

    |

    சென்னை: பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ராஜா தயாரித்திருக்கிறார். அக்டோபர் 7ம் தேதி வெளியான இப்படம் வசூலைக் குவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படக்குழுவின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய சிவகார்த்திக்கேயன், மேடையிலேயே கண்ணீர் விட்டு வேதனையுடன் தனது படங்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுவது குறித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், விழா மேடையில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், 'மறைந்த பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மட்டும் தற்போது உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் ரெமோ சிவகார்த்திக்கேயனை காதலித்திருப்பார்' என்றார்.

    வீடியோ:

    English summary
    On Tuesday, October 11, Sivakarthikeyan got emotional on the Remo success meet stage as he spoke about the struggles that they faced to complete the film and about people, who created roadblocks to halt their progress.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X