Don't Miss!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- News பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இதைவிட்டால் என் பிள்ளையைப் பாராட்ட வேறு மேடை கிடைக்காது: சிஷ்யனைப் பாராட்டிய பாரதிராஜா- வீடியோ
சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தை பார்த்திபன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் தன்னுடைய குருநாதர் பாக்யராஜுக்குப் பாராட்டு விழா என இரண்டு விழாக்களையும் ஒருசேர சென்னையில் நடத்தினார் பார்த்திபன். இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர், கரு.பழனிப்பன், பிரபு, பி.வாசு, கார்த்திக் சுப்புராஜ், தரணி, லிங்குசாமி, விஷால் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் இதில் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய பாரதிராஜா, 'இரண்டு வருடங்களாக பல நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்டால், என் பிள்ளையை பாராட்ட வேறு மேடை கிடைக்காது. யாரிடம் பேசினாலும், "பாரதிராஜா" என்று என் பெயரைச் சொல்லாத ஒரே சிஷ்யன் பாக்கியராஜ். எங்க இயக்குநர் என்று மட்டுமே சொல்லுபவன்" எனப் பாராட்டினார்.