twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவிரி விவகாரம்.. முதல்வரின் முடிவுக்கு நடிகர் சங்கம் துணையாக இருக்கும்: நாசர்- வீடியோ

    |

    சென்னை: சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் நாசர் தலைமை தாங்கிய இந்த கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், மற்றும் பிரசன்னா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், பூச்சி முருகன், உதயா, நந்தா, குட்டி பத்மினி, நிரோஷா, கோவை சரளா, லலிதா குமாரி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நாசர் மற்றும் விஷால், "காவிரி பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முடிவுகளுக்கு நடிகர் சங்கம் துணையாக இருக்கும்" எனத் தெரிவித்தனர்.

    வீடியோ:

    English summary
    South Indian Actors' association's urgent meeting was held in Chennai yesterday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X