தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் சிவக்குமாரின் காலத்தால் அழியாத ஓவியங்கள் கண்காட்சியாக..- வீடியோ
சென்னை: தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் எனப் புகழப்படுபவர் நடிகர் சிவக்குமார். நடிகராக மட்டுமின்றி சிறந்த சொற்பொழிவாளராகவும், ஓவியராகவும் தன் திறமையை சிவக்குமார் நிரூபித்துள்ளார். இந்நிலையில், அவரது 75வது பிறந்தநாளையும், திரையுலக வாழ்வின் 50வது ஆண்டு விழாவையும் வெகுசிறப்பாகக் கொண்டாட திட்டமிட்ட அவரது மகன்களும், நடிகர்களுமான சூர்யாவும், சிவக்குமார் வரைந்த ஓவியங்களைக் கொண்டு சென்னையில் மாபெரும் ஓவியக்கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர். நடிகர் கார்த்தி திறந்து வைத்த இந்த கண்காட்சி கடந்த 24ம் தேதி தொடங்கியது.
Comments


Click it and Unblock the Notifications