twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல தமிழ் நடிகர்!

    |

    சென்னை : முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக நடிகை நயன்தாரா சோலோவாக நடிக்கும் படங்களும் வசூலை குவித்து வருகிறது.

    தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் நெற்றிக்கண் திரைப் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி இருக்க நேரடியாக ஓ டி டி தளத்தில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    பரட்டை தலை.. நீண்ட தாடி மீசை.. அடையாளமே தெரியாமல் மாறிப்போன பாலிவுட் தாதா.. லீக்கான டைகர் 3 கெட்டப்!பரட்டை தலை.. நீண்ட தாடி மீசை.. அடையாளமே தெரியாமல் மாறிப்போன பாலிவுட் தாதா.. லீக்கான டைகர் 3 கெட்டப்!

    காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த என படு பிஸியாக நடித்து வரும் நயன்தாரா அதேசமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து வர அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தில் வில்லனாக பிரபல தமிழ் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பார்வையற்ற பெண்ணாக

    பார்வையற்ற பெண்ணாக

    தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் அடித்து வரும் நிலையில் சமீபத்தில் நேரடியாக ஓ டி டி தளத்தில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்து பிரம்மிக்க வைத்திருந்தார். ஒவ்வொரு காட்சியும் பார்க்கும் அனைவரையும் சீட்டின் நுனியில் உட்கார வைத்து த்ரில்லருக்கு பஞ்சம் இல்லாமல் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தை விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து நடத்தி வரும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி இருந்தார். கோ படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றிருந்த நடிகர் அஜ்மல் இப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் .கோ படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் அஜ்மல் நடித்திருந்தாலும் சரியான அங்கீகாரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் நெற்றிக்கண் திரைப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டு இவரது நடிப்புக்கு தீனி போட்டுள்ளது என்றே சொல்லலாம். இப்பொழுது அஜ்மலுக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

    ஓடிடியில் வெளியானது

    ஓடிடியில் வெளியானது

    பிரபல கொரியா திரைப்படமான பிளைன்ட் படத்தை ரீமேக் செய்து தமிழில் நெற்றிக்கண் என்ற பெயரில் வெளியாகி இருந்தாலும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு பின் வேறு வழியில்லாமல் நேரடியாக நெற்றிக்கண் ஓடிடியில் வெளியானது. பல மடங்கு லாபத்திற்கு நெற்றிக்கண் விற்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது . இந்த நிலையில் நயன்தாராவின் அடுத்த படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க நானும் ரவுடிதான் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இப்பொழுது இணைந்துள்ளது.

    காத்துவாக்குல ரெண்டு காதல்

    காத்துவாக்குல ரெண்டு காதல்

    விஜய்சேதுபதி நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். சாதாரண காதல் கதையை மிகவும் வித்தியாசமான முறையில் முழுக்க காமெடி காட்சிகளால் நிறைந்து ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் நானும் ரவுடி தான் கூட்டணி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளது. லாக் டவுனுக்கு முன்பே தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற்று வந்தது இடையில் கொரோனா இரண்டாவது அலை பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து இரண்டு பாடல்களை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டிருந்தது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார்.

    எலி பட இயக்குனர்

    எலி பட இயக்குனர்

    இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க ஹீரோயின்களாக சமந்தா மற்றும் நயன்தாரா முதல் முறையாக இணைந்து இப்படத்தில் நடிக்க இப்பொழுது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதி நயன்தாரா, சமந்தா மூவரும் பஸ் படிக்கட்டில் ஃபுட்போர்டு அடித்தவாறு தொங்கிக் கொண்டே சென்ற படப்பிடிப்பு தள வீடியோ சமூக வலைத்தளத்தில் லீக் செய்யப்பட்டு வைரல் ஆனது. அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட சட்டை பண்ணிக் கொள்ளாமல் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை நகர்த்தி கொண்டுள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகவும் நயன்தாரா நடித்துள்ளார். இதற்கிடையில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகும் பாட்டு,மற்றும் லூசிஃபர் தெலுங்கு ரீமேக் காட்பாதர் போன்ற படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நயன்தாரா அடுத்ததாக எலி பட இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

    நயன்தாராவுக்கு வில்லனாக

    நயன்தாராவுக்கு வில்லனாக

    முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக பிரபல தமிழ் நடிகர் விதார்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான விதார்த்துக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. ஆனால் அதன்பிறகு விதார்த் நடித்த படங்கள் எதுவும் சரியாக ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. இந்த நிலையில் அஜித்துக்கு தம்பியாக வீரம் படத்தில் நடித்து அசத்தி இருந்தார். இப்பொழுது கைவசம் ஆயிரம் பொற்காசுகள், அன்பறிவு,என்றாவது ஒருநாள், ஆற்றல் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விதார்த் அடுத்து நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக். விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

    English summary
    Mynaa actor Vidharth plays villain in nayanthara up coming movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X