‘மகாபாரதம்’ அனிமேஷன் படம்: திரௌபதிக்கு குரல் கொடுக்கும் வித்யாபாலன்
மும்பை: நடிகை வித்யாபாலன் அனிமேஷனில் தயாராகும் மகாபாரதத்தில் திரௌபதி கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசிகிறாராம்.
மகாபாரதக் கதையை நவீன தொழிற்நுட்பத்தின் உதவியுடன் பிரமாண்டமாக அனிமேஷன் படமாக தயாரித்து வருகிறார் ஜெயந்திலால் கடா.
தமிழ்ப்பெண்ணான வித்யாபாலன் ஹிந்தி படங்களில் நடித்ததின் மூலம் வெற்றி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரது குரல் திரௌபதி குரலுக்கு சரியாக பொருந்தும் என எண்ணிய படக்குழுவினர் இது குறித்து வித்யாபாலனிடம் தெரிவிக்க, அவரும் ஓகே சொல்லி விட்டாராம்.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான ஜெயந்திலால் கடா கூறுகையில், 'வித்யாபாலனின் குரலை விட வேறு குரல் எதுவும் திரௌபதி குரலுக்கு மிகச் சரியாக பொருந்தி வரும் என நாங்கள் எண்ணவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அனிமேஷன் மகாபாரதப் படத்தில், பீஷ்மருக்கு அமிதாப்பும், பீமனுக்கு சன்னி தியோலும், அர்ஜூனன் கதாபாத்திரத்துக்கு அஜய் தேவகனும், கர்ணனுக்கு அனில் கபூரும், யதீஷ்டருக்கு மனோஜ் பாஜ்பாயும் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வரும் தீபாவளிக்கு இப்படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











