Don't Miss!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கோவா டூர் ஓவர்.. தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: கோவா சென்றிருந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னை திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர்.
'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் பாலிவுட்.. சுஷாந்த் சிங் மரண வழக்கு.. இந்த ஹீரோயின்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு!
நடிகை நயன்தாரா
இவர்கள் பல்வேறு கோயில்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின்போது இருவரும் சில கோயில்களுக்கு சென்று வந்தனர். அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்திருந்தனர்.
லாக்டவுனில் நயன்தாரா பற்றிய செய்தி அவ்வப்போது பரபரப்பை கிளப்பியது.
ஜோசியர் ஆலோசனை
நயன்தாராவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதற்காக சிகிச்சைப் பெற்று வருவதாகவும் செய்தி பரவியது. இதை விக்னேஷ் சிவன் மறுத்து காட்டமாகப் பதிலளித்து இருந்தார். பின்னர் ஜோசியர் ஆலோசனைப்படி திருநாகேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல இருப்பதாகவும் அதற்கு பிறகு திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
நோக்கங்கள் இருக்கு
இந்நிலையில் விக்னேஷ் சிவன், இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் பண்ணி வச்சுட்டாங்க. மூனு மாதத்துக்கு ஒரு முறை எங்களுக்குத் திருமணம் பண்ணி வச்சிருவாங்க. எங்களுக்குன்னு சில நோக்கங்கள் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் சொந்த வாழ்க்கைக்கு வரணும்னு நினைக்கிறோம் என்று கூறியிருந்தார்.
தனி விமானப் பயணம்
இதற்கிடையே ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு தனி விமானத்தில் இருவரும் சென்றனர். காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்து நயன்தாரா ஹாலிவுட் நடிகை சாயலில் இறங்கி வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாயின.
அம்மாவின் பிறந்தநாள்
இதையடுத்து இருவரும் வெக்கேஷனுக்காக கோவா சென்றனர். அங்குள்ள ரெசார்ட் ஒன்றில் அவர்கள் தங்கியிருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் நயன்தாரா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார்.
Recommended Video
சென்னைத் திரும்பினர்
இந்நிலையில் கோவாவில் இருந்து இருவரும் நேற்று சென்னைத் திரும்பினர். இருவரும் தனி விமானத்தில், இருந்து இறங்கி வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. நடிகை நயன்தாரா, அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சமந்தாவும் நடிக்கிறார்.