காதலர் தினம்.. எங்கள் காதலுக்கு பத்து வயது.. நயன்தாராவுடன் ரொமாண்ட்டிக் ஃபோட்டோ போட்ட விக்னேஷ் சிவன்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் சூழலில் விக்னேஷ் சிவன் நயன் தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்திருகிறார். அந்த இன்ஸ்டா போஸ்ட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படத்திலேயே சிம்புவை ஹீரோவாக கமிட்டாக்கி கவனம் ஈர்த்தார். அதேபோல் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நடிகை ஷோபனா என பெரிய ஸ்டார் வேல்யூவுடன் படம் உருவானது. ஸ்டார் வேல்யூ மட்டுமின்றி கதை ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நானும் ரௌடிதான்: 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து விஜய் சேதுபதி ஒத்துக்கொள்ள நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.
நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் வாடகை தாய் விவகாரத்தில் இருவரும் எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்பது அரசு சார்பில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
காதலர் தினம்: இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் நயன் தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "எங்கள் காதலுக்கு வயது பத்து. ஒரு தசாப்தமாக நயனுடன் நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ரோஜாப்பூக்கள் நிரம்பிய பூங்கொத்து ஒன்றையும் பரிசாக கொடுத்து தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அவரது இந்த இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
எல்.ஐ.சி: விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் நாள் ஷூட்டிங்கை முடித்த எஸ்.ஜே.சூர்யா விக்னேஷ் சிவனை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அவர் கூறிய கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை மாற்ற சொல்லியது. ஆனால் அதை ஏற்க மறுத்த விக்னேஷ் சிவன் அந்தப் படத்திலிருந்தே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











