Don't Miss!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
2017, 2018ல் ராதாரவி என்ன செய்தார் தெரியுமா?: புட்டு புட்டு வைத்த விக்னேஷ் சிவன்
Recommended Video
சென்னை: 2018ம் ஆண்டு நடிகை ஒருவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் நயன்தாராவை கேவலமாக விமர்சித்தார்.
தனது காதலியை விமர்சித்த ராதாரவி மீது கோபம் கொண்டு விக்னேஷ் சிவன் தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ராதாரவி சர்ச்சை பேச்சு மட்டுமல்ல.. நயன்தாரா பட விழா மேடையில் நடந்த மற்றொரு பரபரப்பு..!
|
பாலியல் புகார்
2018ம் ஆண்டு ஒரு நடிகை ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் தான் யார் என்பதை தெரிவிக்க அவர் பயந்தார். ராதாரவி எந்த பிரச்சனையும் இல்லாமல் தப்பித்துவிட்டார். அதன் பிறகு மிஸ்டர் ராதாரவி மீ டூ இயக்கத்தை கிண்டல் செய்தார்.
|
ராதாரவி
2017ம் ஆண்டு மிஸ்டர் ராதாரவி குறைபாடு உள்ள குழந்தைகளை விமர்சித்தார். ராதாரவி போன்ற ஆண்களால் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது.
|
கனிமொழி
ஸ்டாலின் சார், கனிமொழி மேடம் ஆகிய இருவரும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்கள். தயவு செய்து ஆணாதிக்கவாதியான மிஸ்டர் ராதாரவி மீது நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
|
தற்காலிக நீக்கம்
நயன்தாரா விவகாரத்தை அடுத்து ராதாரவியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.