இந்த மாதிரி செல்பி போட்டு ஏன் இப்படி இளசுகளை நோகடிக்கிறீங்க விக்னேஷ் சிவன்?
நயன்தாராவை கட்டிப்பிடித்து எடுத்த செல்பியை விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: நயன்தாராவை கட்டிப்பிடித்து எடுத்த செல்பியை விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றி டேட்டிங் செய்து வருகின்றனர்.
காதல் ஜோடிகளாக உலா வரும் இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கோலிவுட்டில் பேச்சு உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார் நயன்தாரா.

கோலமாவு கோகிலா
அதன்பிறகு இருவரும் புதிய படத்தில் இணையாமலிருந்தனர். தற்போது, ‘கோலமாவு கோகிலா' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நயன்.

நயனை வர்ணித்து பாடல்
இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் இயக்குனர் விக்னேஷ்சிவன் நயன்தாராவை வர்ணித்து பாடல் எழுதி உள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

கட்டிபிடித்து செல்பி
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நயனுடன் இணைந்துள்ளார் விக்னேஷ்சிவன். அப்போது நயனை நெருக்கமாக கட்டி அணைத்து செல்பி எடுத்துள்ளார்.
மகிழ்ச்சி அடைந்தேன்
அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட விக்னேஷ் சிவன்,'இந்த அழகியுடன் 3 வருடத்துக்கு பிறகு பணியாற்றினேன். ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தேன்' என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











