Don't Miss!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல்… விறுவிறுப்பான இறுதிகட்ட படப்பிடிப்பு !
சென்னை : விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்.
என்னது...வலிமை தீபாவளி ரிலீசா...டிரெண்டிங்கில் பட்டையை கிளப்பும் தல தீபாவளி
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், லலித்குமார் வழங்க முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார்.
காத்துவாக்குல ரெண்டு காதல்
விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணி காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். நானும் ரௌடிதான் படத்திற்காக இணைந்த இந்த கூட்டணி மீண்டும் தற்போது இணைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நிலைமை சீரானதை அடுத்து, படப்பிடிப்பை தொடங்கவிருந்த நிலையில் விஜய்சேதுபதியின் கால் ஷீட் கிடைக்காததால் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
படப்பிடிப்பில் பிஸி
விஜய் சேதுபதி 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனால் ஒவ்வொரு படத்திற்கும் பிரித்து பிரித்து தேதியை கொடுத்துள்ளார். திண்டுக்கல்லில் பொன்ராம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அங்கு படப்பிடிப்பு தாமதமானதால், அவரால், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது.
பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு
இதையடுத்து, தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி உள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பை முடித்த கையோடு, அடுத்தக்கட்ட பணிகளை விரைந்து முடித்து, அக்டோபரில் படத்தை வெளியிட 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப படத்தின் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
ஒரேகட்டமாக
நடிகை நயன்தாரா, குடும்ப உறவுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திகில் படம் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதை புதுமுக இயக்குனர் விக்னேஷ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. மதுரையிலும். சென்னையிலும் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.
நெற்றிக்கண் அசத்தலான நடிப்பு
நயன்தாரா நடித்துள்ளள நெற்றிக்கண் திரைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது. அந்த படத்தில், பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் அனைவரும் அசந்து போகும் அளவில் நடித்துள்ளார் நயன்தாரா.
பல படங்கள் கைவசம்
நயன்தாராவுக்கு ஏற்கனவே ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வெளியாகிறது. மேலும் 6 புதிய படங்களில் நடிக்கவும் நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார். 2 தெலுங்கு படங்களில் நடிக்கவும் கதை கேட்டு இருக்கிறார்.
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!