Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நீயா நானா அப்பா மகள் பாசத்தால் உருகிப் போன விக்னேஷ் சிவன்.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் எபிசோடு அனைவரையுமே நெகழ வைத்து விட்டது.
படிப்பறிவு இல்லாத கணவர் என மனைவி கிண்டல் அடிக்க, எங்க அப்பா தோற்கலன்னு சொல்லி மகள் அப்பாவை ஜெயிக்க வைத்த தருணம் பலராலும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் விஜய் டிவி நீயா நானாவின் புரமோவை ஷேர் செய்து போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
டிக்டாக் பிரபலம் சோனாலி கொலை வழக்கு..சிபிஐ விசாரணைக்கு மாற்றம்?
தமிழா தமிழா vs நீயா நானா
சாக்லெட் பாய் vs ரக்கட் பாய் விவாதத்தை ஆரம்பித்து தமிழா தமிழா டிரெண்டிங்கில் இடம் பிடித்த நிலையில், 15 வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் நீயா நானா மீண்டும் டிரெண்டிங்கை பிடிக்க விட்ட பிரம்மாஸ்திரம் தான் இந்த கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டாப்பிக். அதிலும், அந்த அப்பா மகள் பாசப் போர்ஷன் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து விட்டது.
அப்பா மகள்
வியாபாரத்தில் நஷ்டமடைந்த நிலையில், மனைவி உள்பட அவரது வீட்டார் யாருமே மதிக்காத நிலையில், வாழ்ந்து வரும் சீனி ராஜாவை பற்றி அவரது மனைவி ஏளனமாக பேசியது தொகுப்பாளர் கோபிநாத்தை ரொம்பவே ஆத்திரம் அடையச் செய்தது. நிகழ்ச்சியின் ரூல்ஸை மீறி பாதியிலேயே பரிசை சீனி ராஜாவுக்கு கொடுத்து டிஆர்பி ஸ்டண்ட்டை செய்திருந்தார். சீனி ராஜாவின் மகள் அம்மாவை போல அப்பாவை அசிங்கப்படுத்தாமல், அப்பா பக்கம் நின்றது தான் அனைவரையும் உருக வைத்தது.
விக்னேஷ் சிவன் ட்வீட்
சமூக வலைதளங்களில் பலரும் சீனி ராஜாவை ஆதரித்தும் அவரது மனைவியை திட்டியும் வருகின்றனர். தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சீனி ராஜா தனது மனைவி தன்னை காப்பாற்றி வருவது குறித்து உருக்கமாக பேசி உள்ளார். இந்நிலையில், நீயா நானா புரமோவை ஷேர் செய்து இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று
நீயா நானாவின் லேட்டஸ்ட் எபிசோடை பார்த்து நெகிழ்ந்து போன இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது ட்விட்டர் பக்கத்தில், "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று" என தங்கமீன்கள் படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய வைர வரிகளை பதிவிட்டு தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
கமெண்ட்ஸில் பஞ்சாயத்து
விக்னேஷ் சிவன் போட்ட நோக்கத்தையும், அவர் பதிவிட்டதையும் புரிந்து கொள்ளாத சில நெட்டிசன்கள் "முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று" என அவர் தவறாக பதிவிட்டுள்ளார் என தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். விக்னேஷ் சிவன் ரசிகர்கள், இல்லை என்பது அன்று என்பதும் ஒன்று தான் என விளக்கி வருகின்றனர்.