விக்னேஷ் சிவனின் கனவை நினைவாக்கிய செல்வராகவன்
Recommended Video

சென்னை: இயக்குனர் செல்வராகவனுடன் பணியாற்றும் கனவு நிறைவேறியுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
போடா போடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் படங்களை இயக்கினார்.

இயக்குனர் மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் வலம் வரும் விக்னேஷ் சிவன், தற்போது சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படத்தில் பாடல்கள் எழுதியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் என்.ஜி.கே. பொலிட்டிகல் த்ரில்லராக தயாராகி வரும் இப்படத்தில், ரகுல்ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கின்றனர். தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் தள்ளிப்போகிறது.
தற்போது கேவி ஆனந்த் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள சூர்யா, ஷார்ட் ஹேர் லுக்கில் இருப்பதால் அடுத்த மாதம் மீதமுள்ள காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், என்.ஜி.கே திரைப்படத்தின் பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாகவும், பாடல்கள் முழு வீச்சில் தயாராகி வருவதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும், பாடல்கள் எழுதியதன் மூலம், செல்வராகவனுடன் பணியாற்ற வேண்டுமென்ற கனவு நினைவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











