ஹரி-விஜய் கூட்டணி: ஆடி முடிந்த உடன் அறிவிப்பு?

இயக்குனர் ஹரி முதலில் விஜய்யிடம் தான் சிங்கம் கதையை தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து தான் அந்த படத்தில் சூர்யா நடித்தார். சிங்கம் 2 படமும் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
சிங்கம் 2 படத்தை முடித்த உடன் ஹரி கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஹரி விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளார்.
இது குறித்து விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆடி மாதம் முடிந்த பிறகு புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.
ஏராளமான ரசிகர்கள் உள்ள விஜய் ஹரியின் மாஸ் படத்தில் நடித்தால் சூப்பராகத் தான் இருக்கும்.
Comments


Click it and Unblock the Notifications