Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"தலைவரை" அவமானப்படுத்துவதா.. சூர்யாவிற்கு எதிராக பொங்கும் அஜித், விஜய் ரசிகர்கள்!
சென்னை: சமீபத்தில் மூன்று முறை பெயர் மாற்றம் செய்து வெளிவந்த மாசு என்கிற மாசிலாமணி படத்திற்கு விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடம் இருந்து பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அஜித் மற்றும் விஜயின் சூப்பர் ஹிட் படங்களின் வசனங்கள் மற்றும் அவர்கள் நடித்த படங்களின் கதாபாத்திரங்களின் பெயரை மாசு படத்தில் இஷ்டத்துக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு என்பதுதான் இந்த கோபத்திற்குக் காரணம்.
விஜயின் துள்ளாத மனமும் துள்ளும், கத்தி, அஜித்தின் ஆரம்பம், வீரம் போன்ற படங்களின் வசனங்களை , பாடல்களை மாசு படத்தில் பயன்படுத்தியிருப்பது இரு தரப்பு ரசிகர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது பத்தாதென்று துப்பாக்கி படத்தில் விஜயின் பெயரான ஜெகதீஷை சூர்யாவின் பெயருக்கு சூட்டியிருக்கிறார்கள். அஜித்தின் மங்காத்தா படத்தில் அவரின் பெயரான விநாயக் மகாதேவ் பெயரை பிரேம்ஜிக்கு வைத்திருக்கிறார்கள்.
காமெடியனுக்குப் போய் தங்கள் தலைவரான அஜித்தின் பெயரை சூட்டியது அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. எனவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து மாசு படத்திற்கும் வெங்கட் பிரபுவுக்கும் எதிராக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.
இதில் உச்சகட்டமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தங்களுக்குள் இதனால் மோதிக் கொள்கிறார்கள் என்பதுதான் கொடுமை.
எதையுமே பிளான் பண்ணி செய்யனும்.. பிளான் பண்ணி செய்யாட்டி இப்படித்தான் ஆகும்!