Don't Miss!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- News உலகத்திலேயே நடக்காதது.. மன்னிக்க முடியாதது- மதிமுக கணேசமூர்த்தி மரணம் படுகொலையே..தமிழிசை படு ஆவேசம்!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஜய் ஆண்டனி, ஆத்மிகாவின் அரசியல் த்ரில்லர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.. இதுதான் டைட்டிலா?
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை ஆத்மிகா நடிப்பில் உருவாகி வரும் அரசியல் த்ரில்லர் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக போடப்பட்ட லாக்டவுனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்த நிலையில், உடனடியாக இந்த படத்தின் வேலைகளை விஜய் ஆண்டனி தொடங்கி உள்ளார்.
'என் மீதான கோபத்தை மறவேன்..' டைரக்டர் சேரனுடன் என்னதான் பிரச்னை? விஜய் பட இயக்குனர் விளக்கம்!
யார் இயக்குநர்
நடிகர் வித்தார்த் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்ற ‘ஆள்' மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தை மையமாக வைத்து கோலிவுட் ரசிகர்களையே பதற வைத்த ‘மெட்ரோ' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார். லாக்டவுனுக்கு முன்னதாக இந்த படத்திற்கு பூஜைப் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆத்மிகாவின் அடுத்த படம்
மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு நடிகை ஆத்மிகா நரகாசூரன் மற்றும் காட்டேரி ஆகிய இரு படங்களில் நடித்து இருந்தார். ஆனால், அந்த இரு படங்களும் இதுவரை வெளியாகவே இல்லை. நரகாசூரன் எப்போது ரிலீசாகும் என்பது இயக்குநருக்கே தெரியாத நிலையில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்த அரசியல் படத்தில் இணைந்துள்ளார் ஆத்மிகா.
இரண்டாவது முறையாக
ஏற்கனவே அரசியல் த்ரில்லர் படமான ‘எமன்' படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இரண்டாவது முறையாக அரசியல் த்ரில்லர் படத்தை விஜய் ஆண்டனி தேர்வு செய்துள்ளார். இந்த படத்திற்கு ‘அன்பு இல்லையெனில் ஒரு அணுவும் அசையாது' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஷூட்டிங் தொடக்கம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக ஷூட்டிங் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், 75 பேர் படக்குழுவுடன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஷூட்டிங்கை நடத்த விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழு திட்டமிட்டு, ஷூட்டிங்கை தொடங்கி உள்ளனர்.
ஏகப்பட்ட படங்கள்
விஜய் ஆண்டனி நடிப்பில் ஏற்கனவே அக்னிச் சிறகுகள், தமிழரசன், காக்கி, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்கள் பல கட்ட நிலைகளில் தயாரிப்பு பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அந்த படங்களும் முழுமையாக தயாரிப்பு பணிகள் நிறைவுபெற்று ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.