Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இங்க யாருக்கும் எதுவும் தெரியாது.. என்னங்க இப்படி சொல்லிட்டாரு விஜய் ஆன்டணி!
சென்னை : நடிகர் விஜய் ஆன்டணி நடிப்பு, இசை மற்றும் தயாரிப்பு என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார்.
ரசிகர்களுக்கு தொடர்ந்து சிறப்பான இசையை கொடுத்துவரும் விஜய் ஆன்டணியின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
பிச்சைக்காரன் 2 படத்தின்மூலம் இயக்குநராகவும் அவர் அவதாரம் எடுக்கவுள்ளார். இதன் முதல் பாகம் அவருக்கு சிறப்பான வெற்றிப்படமாக அமைந்தது.
ஒன்னு இல்ல..ரெண்டு இல்ல..மூனு ஹீரோயின்களுடன் அசோக்செல்வன்!
நடிகர் விஜய் ஆன்டணி
நடிகர் விஜய் ஆன்டணி இசையமைப்பாளராக ரசிகர்களிடம் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். திரைத்துறையில் தனது அடுத்த நகர்வாக இவர் நடிகனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
சிறப்பான பிச்சைக்காரன் படம்
நான், சலீம் என சிறப்பான படங்களை கொடுத்த இவர், ஆக்ஷன் அவதாரத்திலும் ஜொலித்து வருகிறார். தொடர்ந்து அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் இவருக்கு ரசிகர்களிடையே சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. சிறந்த நடிகராகவும் ஏற்க வைத்தது.
இயக்கத்திலும் விஜய் ஆன்டணி
அடுத்ததாக இவரது நடிப்பில் மழை பிடிக்காத மனிதன், ரத்தம், கொலை உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார் விஜய் ஆன்டணி. பிச்சைக்காரன் 2 படத்தை இவர் இயக்கி வருகிறார். இசையமைப்பு, தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என அனைத்திலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார்.
யாருக்கும் எதுவும் தெரியாது
ஆனாலும் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அவரது குணம் மட்டும் தொடர்ந்து வருகிறது. அதற்கான காரணத்தையும் தற்போது பேட்டி ஒன்றின்மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் இந்த உலகத்தில் யாருக்கும் எதுவும் தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலகத்தின் பெரிய பணக்காரனும், ஏழைக்கும் பிச்சைக்காரனுக்கும் எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
அனைவரும் ஒன்றுதான்
மற்றவர்களுக்கு எல்லாம் தெரிந்துள்ளது என்று யாருடனும் நம்மை கம்பேர் செய்யாமல் வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு கோடிகளை வைத்திருந்தாலும் அதிகமாக படித்திருந்தாலும் அனைவரும் ஒரு 70 வயதில் சாகத்தான் போகிறார்கள் என்று கூறியுள்ள விஜய் ஆன்டணி, இதனால் அனைவரும் ஒன்றுதான் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அமைதியா ட்ராவல் பண்ணுங்க
நாம் இருக்கும் இடத்திலிருந்து அமைதியாக ட்ராவல் பண்ணலாம், படுத்துத் தூங்கலாம் நமக்கு பிடித்த எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றும், இதுதான் சந்தோஷம் என்றும் சந்தோஷம் என்பதை மனதை அமைதியாக வைத்துக் கொள்வதுதான் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இதன்மூலம் அனைத்தையும் ரசிக்கும் குணம் தானாகவே வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
சந்தோஷம் என்பது அமைதி
தன்னை பொறுத்தவரையில் சந்தோஷம் என்பது அமைதி என்றும் நானும் இருக்க வேண்டும், மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பது அமைதியை தரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இதுதான் அவரது அமைதியான குணத்திற்கு காரணமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!