Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஜய் ஆண்டனி 'திமிரு புடிச்சவன்'
சென்னை: விஜய் ஆண்டனி திமிரு புடிச்சவன் என்று படித்ததும் அவரின் குணத்தை பற்றி நினைக்க வேண்டாம்.
விஜய் ஆண்டனியின் படங்கள் வித்தியாசமான கதையம்சம் கொண்டவை. மேலும் அவரின் பட தலைப்புகளும் வித்தியாசமாகவே இருக்கும். மனிதர் பார்த்து பார்த்து தேர்வு செய்வார் போன்று.
இந்நிலையில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
விஜய் ஆண்டனி
புதுமுகம் கணேஷாவின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு தான் திமிரு புடிச்சவன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
முதல் முறை
விஜய் ஆண்டனி முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். வழக்கமான ஹீரோ, வில்லன் மோதும் படமாக இது இருக்காது. ஆக்ஷன் காட்சிகள் அதிரும் என்று கணேஷா தெரிவித்துள்ளார்.
வித்தியாசம்
திமிரு புடிச்சவன் படத்தில் வித்தியாசமான விஜய் ஆண்டனியை பார்ப்பீர்கள். இளைஞர்கள் யாரை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த படம் பரிந்துரைக்கும் என்கிறார் கணேஷா.
இசை
திமிரு புடிச்சவன் படத்தில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் இசை, எடிட்டிங் வேலையையும் கவனிக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த கதையே விஜய் ஆண்டனியை மனதில் வைத்து எழுதப்பட்டதாம்.
இயக்குனர்
திமிரு புடிச்சவன் கதையோடு விஜய் ஆண்டனியை 3 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். வேறு யாரையும் வைத்து படம் எடுக்க விரும்பாமல் அவருக்காக காத்திருந்தேன் என்கிறார் கணேஷா.