Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிச்சைக்காரன் 'கோட்டா' விவகாரம்.... பாடல் வரியைத் திருத்தினார் விஜய் ஆன்டனி
பிச்சைக்காரன் பாடலில் கோட்டா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையால், அந்த குறிப்பிட்ட வார்த்தை மாற்றப்பட்டுள்ளது என நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
'பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு' என்ற சமூக விழிப்புணர்வு பாடலை, பிச்சைக்காரன் படத்தின் விளம்பர பாடலாக கவிஞர் லோகன் எழுதியுள்ளார். அந்த பாடலில், பண பலம் படைத்த கல்வித் தகுதி இல்லாத சிலர், தன் பண பலத்தை உபயோகித்து, தனியார் கல்வி நிறுவனங்கள் சிலவற்றுக்கு லட்சத்தையும், கோடிகளையும் கொடுத்து, மருத்துவர்களாகி, நல்ல மருத்துவ சமுதாயத்துக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்பதைத்தான், 'கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த டாக்டர்களை அவமதித்து, லோகன் இந்த பாடலை எழுதவில்லை. கவிஞர் லோகனும், பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சாதனைப் படைத்தவர்கள்.
ஒரு வரியை கொண்டு எங்கள் மீது களங்கம் கற்பிக்க வேண்டாம். பாடலை முழுமையாக கேட்டால்தான் பாடல் எழுதப்பட்ட நோக்கம் என்ன, யாருக்காக எழுதப்பட்டது என்பது புரியும். இந்த பாடல் மூலம் சமுதாயத்தில் ஓடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளைத்தான் சொல்லுகிறோம். யாரையும் புண்படுத்தவில்லை.
ஒரு நல்ல மருத்துவன் எப்படி வாழ வேண்டும் என 'சலீம்' திரைப்படம் மூலம் வாழ்ந்து காட்டியவன் நான்.
பாடலின் அர்த்தம் சிலருக்கு சரியாக புரியவில்லை என்பதால், கோட்டா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'காசு கொடுத்து' என மாற்றிவிட்டோம்," என குறிப்பிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.
முன்னதாக "பிச்சைக்காரன்' திரைப்படத்தின் விளம்பர பாடல் வரிகள் மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது.
பாடல் வரிகளில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வி பயின்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு மூலம் படித்த டாக்டர்கள் தவறாக ஊசியைப் போட்டு நோயாளிகளைக் கொல்கிறார்கள் என்ற பொருளில் அமைந்துள்ள வரிகள் சமூக நீதிக்கு எதிரானது, என கூறியிருந்தனர்.