Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஏப்ரலில் வருகிறார் கோடியில் ஒருவன்...தனஞ்செயன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: விஜய் ஆன்டனி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் கோடியில் ஒருவன். ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
கொரோனாவால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இந்த படத்தின் சூட்டிங் இப்போது நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்துள்ளார்.
சூட்டிங்கின் நிறைவு நாளில் கேக் வெட்டி படக்குழு இதனை கொண்டாடி உள்ளது. இது தொடர்பான போட்டோக்களையும் தனஞ்செயன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அத்துடன் இப்படம் ஏப்ரலில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது சிறப்பான பணி எனவும் தனஞ்செயன் படக்குழுவினரை பாராட்டி உள்ளார். இதனையடுத்து ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது.
விஜய் ஆன்டனியும் தனது ரசிகர்களுக்கு இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இப்படத்தின் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.