Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
விஜய் - படத்தின் கதை என்ன தெரியுமா?
மௌன ராகம் தான் ராஜா ராணி, சத்ரியன் தான் தெறி அப்ப இந்த படம் எதோட ரீமேக்காக இருக்கும் என்று விஜய் அட்லீ படம் பற்றி யோசித்தவர்கள் வாய்க்கு ஒரு அவல் கிடைத்து விட்டது.
அப்பாவையும் அம்மாவையும் வில்லன் கொன்று விடுவான். பிறக்கும் இரட்டையர்களில் ஒருவர் வில்லனைப் பற்றி தெரிந்துகொண்டு பழி வாங்க சபதம் எடுப்பார். இன்னொருவர் வில்லன், பழி வாங்கல் பற்றி எதுவுமே தெரியாமல் அந்த பழி வாங்கலில் வந்து அப்பாவியாக மாட்டிக்கொள்வார். அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம் உட்பட பல படங்களின் கதை முடிச்சு தான் இது. இந்தக் கதையைத்தான் தூசி தட்டி எடுத்து வருகிறாராம் அட்லீ.
இதற்குள் மருத்துவமனைகளின் கொள்ளை, உறுப்பு திருட்டு, ஒரு விஜய் அப்பாவை கொன்ற அப்பாவின் நண்பன் மருத்துவமனையிலேயே மருத்துவராக பணிபுரிவது, இன்னொரு விஜய் மேஜிஷியனாக இருந்துகொண்டு அப்பாவைக் கொன்றவனை பழி வாங்குதல் என்று மசாலாவைத் தூவி இருக்கிறார்களாம். ராஜமௌலியின் ஃபேவரிட் திரைக்கதை ஆசிரியரான விஜயேந்திர பிரசாத் தான் இந்த படத்துக்கு திரைக்கதை என்பதால் இன்னும் மசாலா இருக்கும் என நம்பலாம்.
பைரவாவுக்கு இது போன்ற கதை தேவலாம் என்று முடிவு எடுத்து விட்டார் போல...!