விஜய் முருகதாஸ் மோதல்? கத்திக்கு மேலும் சிக்கல்?
கத்தி இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் கத்தி படத்திற்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது கத்தி படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஆரம்பமான நாள் முதல் இன்றுவரை பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதால் இப்படத்திற்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தது.
இந்நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

பேசிக்கொள்ளாத விஜய் முருகதாஸ்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் கத்தி படத்தின் படப்பிடிப்பு நடந்ததாம். அப்போது படப்பிடிப்புக்கு வந்த முருகதாஸும், விஜய்யும் அருகருகே உட்கார்ந்திருந்த போதும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லையாம்.

உதவியாளர்கள் உதவியால்
அன்றைய தினம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லையாம். இதனால் அன்றைய தினம் எடுக்கவிருக்கும் காட்சிகளை முருகதாஸ் தனது உதவியாளர்களிடம் கூற உதவியாளர்கள் விஜய்யிடம் காட்சியை விளக்கினர்.

உருவான சிக்கல்
விஜய்யும் இயக்குநர் முருகதாஸும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்ததால் படக்குழுவினர் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று முருகதாஸின் உதவியாளர்களுக்கே தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

மாமனாருக்கு சிக்கல்
கத்தி படத்தின் தயாரிப்பாளர் பிரச்சனையால் லண்டனில் இருக்கும் விஜய்யின் மாமனாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முருகதாஸ் மீது அதிருப்தி
தயாரிப்பாளர் இவ்வளவு வில்லங்கமானவர் என்பதை முருகதாஸ் தன்னிடம் திட்டமிட்டே மறைத்ததாக விஜய் நினைப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப் படுகின்றன. இதனால் விஜய்க்கு முருகதாஸ் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலவச விளம்பரம்
மேலும் கத்தி படத்திற்கு ஊடகங்களிடம் இருந்து இலவச விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக படத்தின் தயாரிப்பாளர் குறித்த ரகசியங்களை முருகதாஸ் வேண்டுமென்றே கசியவிட்டதாகவும், அது தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

மருத்துவமனையில் அனுமதி
இப்படி கத்தி படத்திற்கு மாற்றி மாற்றி ஏற்பட்ட சிக்கல்தான் முருகதாஸ்க்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்திவிட்டது என்றும் கூறுகின்றனர். இதுகுறித்து முருகாதாஸின் பிஆர்ஓ ரியாஸிடம் கேட்ட போது, அஜீரணக் கோளாறு காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











