Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பயத்தில் விஜய் தேவரகொண்டா.. அம்மாவிடம் உதவி எதிர்பார்ப்பு.. ஆனா, எல்லாம் சந்தோசமான விசயம் தான்!
விஜய் தேவரகொண்டா புதிய வீடு வாங்கியுள்ளார்.
ஹைதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்துக்கு பிறகு அவரது மார்க்கெட் தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ், இந்தி என வளர்ந்து வருகிறது.
அர்ஜுன் ரெட்டி படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரேட் என அவர் நடித்த படங்கள் அனைத்தும் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனால் விஜய்யின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது.
என் சொந்தக்கார பையனை மாஸ் ஹீரோவா ஆக்குங்க.. உங்க புல்லட் பிரச்சனையை நான் சால்வ் பண்றேன்!
இதையடுத்து அவர் படம் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்த நீக்கு மாத்திரமே செப்தா படம் விஜய் தேவரகொண்டாவின் தயாரிப்பு தான்.
இந்நிலையில் அவர் ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ரூ.15 கோடியில் பெரிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீட்டின் கிரகபிரவேச நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் விஜய், தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் இருக்கிறார். மேலும் அந்த பகிர்வில், "நான் ஒரு பெரிய வீடு வாங்கிவிட்டேன். அது எனக்கு பயத்தை தருகிறது. எங்கள் பயத்தை போக்கி, பாதுகாப்பான உணர்வை தரவேண்டியது அம்மாவின் கடமை. இதை அவர் வீடாக மாற்றுவார்", என குறிபிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் இந்த பதிவை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.